tamilnadu

img

வியூகத்தில் அசத்திய இலங்கை கேப்டன்

வீரர்களின் உடல்திறன் மற்றும் தொடர் தோல்வி பிரச்சனை யைக் காரணம் காட்டி  சர்வதேச பின் புலம் குறைவாக உள்ள திமுத் கருணா ரத்னேவை உலகக்கோப்பை தொட ருக்கான இலங்கை கேப்டனாக நிய மித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.சங்ககரா இருந்த காலத்திலேயே நம் மால் கோப்பையை வெல்ல முடிய வில்லை, இந்த கத்துக்குட்டி வீரர் கேப்ட னாக இருந்து என்ன செய்துவிடப்போகி றார் என இலங்கை ஊடகங்கள் கிண்டல் செய்தன. 

கேலி, கிண்டல் பற்றிக் கண்டுகொள் ளாமல் தன் மீது நம்பிக்கை வைத்த கிரிக்கெட் வாரியத்திற்காகக் கோப்பை யை வென்றாக வேண்டும் என்று தீயாய் வேலை செய்து கொண்டிருக்கி றார் கருணாரத்னே. இதுவரை 6 ஆட்டங்களில் விளை யாடியுள்ள இலங்கை அணி 6 புள்ளி களுடன் 5-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணி களுக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணியை வென்ற இலங்கை அணி நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணி களிடம் போராடி தோல்வியடைந்தது. 27-வது லீக் ஆட்டத்தில் பலமான இங்கி லாந்து அணியை 20 ரன்கள் வித்தியா சத்தில் புரட்டி எடுத்தது. 

இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் மட்டும் சொதப்பிய இலங்கை அணி இங்கி லாந்திற்கு 233 ரன்களை வெற்றி இலக்காகக் கொடுத்தது.சொந்த மண் என்பதால் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை அணியின் கேப் டன் கருணாரத்னேவின் அசத்தலான வியூகம் மற்றும் மலிங்காவின் அசுர வேகம் ஆகியவற்றால் 212 ரன்களில் இங்கிலாந்து அணி சுருண்டது. கிரிக்கெட் உலகமே இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்திய அணி யின் கேப்டன் தோனியைப் போலப் பதற்றமடையாமல் பந்துவீச்சா ளர்களுக்கு உத்வேகம் அளித்து வெற்றி யை வசமாக்கினார். உண்மையில் கருணாரத்னேவின் திட்டமிடல் சிறப்பு மிக்கது.      

பாகிஸ்தான், வங்கதேசம் அணி களுக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அந்த ஆட்டங்களில் இலங்கை அணி வெற்றி பெற்றி ருந்தால் புள்ளிபட்டியலில் முதல் நான்கு இடங்களில் கம்பீரமாக செட்டில் ஆகியிருக்கும். ஆனால் துர திர்ஷ்டம் மழை வெற்றிப் புள்ளிகளை காவு வாங்கிவிட்டது. அடுத்து வரும் ஆட்டங்களில் வலுவான வெற்றியைக் குவித்தால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் தான். இருப்பினும் இலங்கை அணிக்கு அடுத்து உள்ள 3 ஆட்டங்களுமே சிக்கல் உருவாக்கு பவை. தென் ஆப்பிரிக்கா, விண்டீஸ், இலங்கை ஆகிய அணிகள் பலமாக இருப்பதால் இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு எப்படி என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.