tamilnadu

img

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்தை கண்டித்து குரல் எழுப்பிய ஷிகர் தவான்

சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் இருவரும் போலீசாரால் அடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் குரல் எழுப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் இருவரும் போலீசாரால் அடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பதிவிட்டுள்ளார். அதில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரத்தைக் கேட்டு, தான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும்,  இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.