இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் நிறைவடைந்தது. புதிய பயிற்சியாளர்கள் தேர்வின் முதற்கட்டமாக, ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் போன்ற பயிற்சியாளருக்கான இறுதிப்பட்டியல் மட்டும் வெளியிடும் வேலை தான் பாக்கி. ஆனால் உத்தேச பட்டியல் மற்றும் இறுதி பட்டியலில் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ராத்தோரும், பந்துவீச்சு பயிற்சியாள ராக பரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சி யாளராக ஶ்ரீதர் ஆகியோர் தேர்வு செய்யப் பட வாய்ப்புள்ளதாகச் செய்திகள் வெளியாகியது. இந்த செய்தி யை அறிந்த தற்போதைய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தேர்வுக்குழுவினரின் அறைக் குச் சென்று, “தன்னை மாற்ற விருக்கும் முடிவுசரியானதாக இருக்காது. பயிற்சியாளரை அணி தேர்வுசெய்யாது. தேர்வுக் குழுவினர்தான் செய்யவேண்டும்” எனக்கூறி சத்தமாகக் கத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ விரை வில் ஒழுங்கு நடவடிக்கையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளர் பதவியையும் சஞ்சய் பாங்கர் விரைவில் இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.