பார்ம் பிரச்சனை காரணமாக உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு கழற்றிவிடப்பட்டார். உலகக்கோப்பை தொடரின் போது, வானுக்குக் காயம் ஏற்படவே மாற்று வீரர்கள் தேர்வில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என ராயுடு எதிர்பார்த்தார். ஆனால் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கவே, தேர்வுக்குழுவை “3 டி” தொழில்நுட்பத்துடன் ஒப்பிட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு முடிவை அறி வித்தார் ராயுடு. ராயுடுவை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அழைத்தது. அதற்குப் பதில் ஏதும் அளிக்கா மலிருந்த ராயுடு தற்போது மனம் மாறி,”ஓய்வு அறிவிப்பை அவசர கதியில் எடுத்துவிட்டேன் எனவும், நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புவதாகவும், செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் ஹைதராபாத் அணியில் இணையத் தயாராக இருக்கிறேன்” என ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் “எனக்கு ஆதரவாக இருந்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்புமாறு உணர்த்திய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மற்றும் முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லக்ஷ்மண், நோயல் டேவிட் ஆகியோருக்கு நன்றி” எனவும் ராயுடு தெரிவித்துள்ளார். தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வில்லை என்ற ஆதங்கத்தில் பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவைக் கடுமையாகச் சாடினார் ராயுடு. ஓய்வு பெற்று விட்டார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் பிசிசிஐ நடவடிக்கையிலிருந்து தப்பினார். தற்போது பெற்றோர் சொல்லுக்குக் குழந்தை மனம் மாறு வது போல மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதி கேட்டுள்ளார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ராயுடுவை மீண்டும் அணியில் சேர்த்தால் பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தயாராகும் என்ப தால் ராயுடுவின் திடீர் மனமாற்றம் அவருக்கு கூடுதல் சிக்கலைத்தான் உருவாக்கும்.