tamilnadu

img

புனே டெஸ்ட் போட்டி : 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புனேயில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தடுமாறியது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை விட 326 ரன்கள் பின் தங்கி காணப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணிக்கு பாலோ ஆன் வழங்கியது. இதனால் 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும்  இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.   
 

;