உலகக்கோப்பை தொட ரின் 7-வது லீக் ஆட்டத் தில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. மழை காரணமாக டக்வொர்த்-லூயிஸ் விதியின் மூலம் ஆட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இலங்கை அணி பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இலங்கை பேட்ஸ்மேன்களின் பொறுப்பில்லாத ஆட்டத்தால் கொதித்தெழுந்த அந்த அணியின் முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷன் வீரர்களை எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடுத் துள்ளார். இதுகுறித்துஅவர் கூறியதாவது,“நடுவரிசை வீரர் கள் பொறுப்புடன் விளையாடவில்லை.ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு பெரிய அளவில் பாதிப்புஏற்படுத்தவில்லை என்றாலும்சிறுவர்கள் போல நடந்துகொள் கிறார்கள். இலங்கை வீரர்களின்பேட்டிங் பங்களிப்பு குறித்து நான்மிகவும் வருத்தப்படுகிறேன். குஷால் பெரேரா இயல்பாக விளையாடி பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் அளித்தார். நல்ல தொடக்கம் கொடுத்த குஷாலுக்கு ஆதரவு அளிக்காமல் இப்படியொரு சரிவைச் சந்தித்ததற்கு நான் நடுவரிசை வீரர்களைத்தான் குறை கூறுவேன்” எனக் கூறியுள்ளார்.