tamilnadu

img

தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் பொல்லார்டு

ஐபிஎல் தொடரின் 12-ஆவது சீசனில் மும்பை அணி,சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் போது, 20-ஆவது ஓவரை (மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்) சென்னையின் டுவைன் பிராவோ வீசினார்.பந்துவீச்சாளரை (பிராவோ) ஏமாற்றுவதற்காக பேட்டிங் செய்துகொண்டிருந்த பொல்லார்டு வைட் லைனை விட்டு வித்தியாசமான முறையில் விலகி நின்றார்.பொல்லார்டை கணித்த பிராவோ வைட் லைனை கிராஸிங் செய்து பந்துவீசினார்.பந்து வைட் ஆக இருந்தாலும் பொல்லார்டின் விதிமீறலைக் கணித்த களநடுவர் பந்து வைட் இல்லை என்று அறிவித்தார்.வைட் இல்லை என்று தெரிந்ததும் கோப மடைந்த பொல்லார்டு, தனது பேட்டை மேலே வீசினார்.அடுத்த பந்தில் இன்னும் சற்று தள்ளி நின்று பந்து வரும்போது விலகிச் சென்றார். பொல்லார்டின் தொடர்ச்சியான விதிமீறலால் ஆவேசமடைந்த கள நடுவர்கள் எச்சரிக்கை மொழிகள் மூலம் எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடுத்து போட்டி நடுவரிடமும் புகாரும் அளித்தனர்.துரித விசாரணையில் களமிறங்கிய போட்டி நடுவர் ஐபிஎல் விதிகளின்படி (2.8 பிரிவு) பொல்லார்டுசெய்தது லெவல் 1 தவறாக கருதப்படுவதால் போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவித்தார். ஐபிஎல் தொடரில் பொல்லார்டு தொடர்ந்து விதிமீறல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் ஐபிஎல் நிர்வாகம் இது குறித்து விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.