tamilnadu

img

பஞ்சாப் அணியின் இயக்குநராக கும்ப்ளே நியமனம்

ஐபிஎல்


கிரிக்கெட் உலகின் முத ன்மையான உள்ளூர்  டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இயக்குந ராக இந்திய அணியின் முன் னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே நியமிக்கப் பட்டுள்ளார்.  மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் இயக்குநர், தலைமை பயிற்சியாளர் என இரண்டு பொறுப்பையும் சேர்த்தே கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2025-ஆம் ஆண்டு வரை 5 ஐபிஎல் சீசன்கள் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே இருப்பார்.   இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் தலைமை பயிற்சியாள ரான அனில் கும்ப்ளே, ஏற்கெ னவே மும்பை, பெங்களூரு ஆகிய இரு ஐபிஎல் அணிகளுக்கும் பயி ற்சியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.