tamilnadu

img

சர்வதேச டி-20 கிரிக்கெட் பேட்டிங்கில் இந்தியாதான் கிங்

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை விரும்பி விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி டி-20 போட்டிகளை அவ்வளவாக விரும்பாது. 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தி கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பின்பு ஆர்வமின்றி சொதப்ப லாகத் தான் விளையாடியது. நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் வெற்றியைக் குவித்தாலும், உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.  தோனி விலகி கோலி கேப்டன் பொறுப்பேற்ற பின்பு இந்திய அணி டி-20 போட்டியில் புதிய அவதாரம் எடுத்து கிரிக்கெட் உலகை மிரட்டி வருகிறது. குறிப்பாக பேட்டிங்கில் இந்தியா தான் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறது.   அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸர்கள், அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக அரை சதங்கள் என பேட்டிங் பிரிவுகளுக் கான சாதனைகள் அனைத்தும் இந்திய அணியின் கேப்டன் (கோலி), துணைக் கேப்டனின் (ரோஹித்) கையில் தான் உள்ளது. இதுபோக ஸ்டெம்பிங் பிரிவும் இந்திய அணியின் அனுபவ வீரர் தோனியிடம் உள்ளது.

அதிக பவுண்டரிகள்:     225 - விராட் கோலி
அதிக சிக்ஸர்கள்:     107 - ரோஹித் சர்மா 
அதிக ரன்கள்:     2422 - ரோஹித் சர்மா
அதிக சதங்கள்:     4 - ரோஹித் சர்மா
அதிக அரை சதங்கள்:    20 - விராட் கோலி
அதிக ஸ்டெம்பிங்:     34 - தோனி
அதிக விக்கெட்டுகள்:     98 - அப்ரிடி
அதிக கேட்ச் :     50 - ராஸ் டெய்லர்

பந்துவீச்சு, கேட்ச் பிரிவுகள் மட்டும் வெளிநாட்டு வீரர்களிடம் உள்ளது. ஆனால் இந்த இரண்டு பிரிவுகளில் இந்திய அணி வீரர்கள் படி இல்லாத ஏணியில் ஏற முயற்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.