கிரிக்கெட் உலகின் முக்கிய தொடரான உலகக்கோப்பை தொடரின் 12-வது சீசனில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பைக்காக இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் கடுமையாகப் போராடின. யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் இரண்டு முறை டை ஏற்பட்டதால் பவுண்டரி கணக்கை வைத்து இங்கிலாந்து அணிக்குக் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டு முறை டை ஆன பின்பும் ஏன் கோப்பையை இரு அணிகளுக்கும் பகிரவில்லை என கிரிக்கெட் உலகமே நியூஸிலாந்து அணி பக்கம் நிற்க, இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இடையே பவுண்டரி விதி தொடர்பாகக் கருத்து மோதல் (டுவிட்டரில்) ஏற்பட்டுள்ளது.
மைக்கேல் வாகன் டுவிட்
சேவாக்கின் டுவிட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரீடுவிட் செய்த மைக்கேல் வாகன் “வில்லியம்ஸன் தலைசிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், இந்த விவகாரத்தில் சேவாக்கின் கருத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு விஷயம் இறுதிப்போட்டிக்கு முடிவு உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
`சேவாக் டுவிட்
நியூஸிலாந்து அணிக்கு இந்திய ரசிகர்கள் அளித்துவரும் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் அந்த அணியின் கேப்டன் வில்லியம்ஸனின் செயல்பாடு தான். வில்லியம்ஸன் இக்கட்டான தருணத்திலும் புன்னகையும், அமைதியை யும் பிரமிப்பாகக் கையாண்டதால் தோல்வி இல்லாமல் இறுதிப்போட்டியை முடித்துவைத்துள்ளார் என சேவாக் பதிவிட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி டையில் முடிந்தது என சேவாக்கும், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது என வாகனும் டுவிட்டர் பக்கத்தில் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் 12-வது சீசன் உலகக்கோப்பை தொடர் இன்னும் நிறைவடையாமல் டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து விளையாடப்பட்டு வருகிறது.