tamilnadu

img

ஸ்மித்திற்கு தோள்கொடுத்த கோலி

ஞாயிறன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அந்தஸ்தில் கள மிறங்கிய ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 36 ரன்கள் வித்தியா சத்தில் புரட்டி எடுத்தது. தொடக்கம் முதலே இரு அணி  வீரர்களும் ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தின. இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித்தை இந்திய ரசிகர்கள் ஒருமையில் கிண்டல் செய்தனர். இந்த விவகாரத்தை ஸ்மித் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றாலும், பேட்டிங் செய்து கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிண்டல் செய்த ரசிகர்களை நோக்கி, “இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் ஸ்மித்திற்கு ஆதரவும், உற்சாகமும் அளிக்குமாறு” அன்புக் கட்டளையிட்டார். விராட் கோலியின் இந்த செயலை கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டு தொடர்பான ஹேஸ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) கோலியின் பண்பான செயலுக்கு பாராட்டுடன் சிறப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. சமீப காலமாக இந்தியா - ஆஸ்தி ரேலிய வீரர்களுக்கு முரண்பாடு கலந்த வெறுப்புணர்வு அதிகம் இருப்ப தால் மைதானத்தில் மோதல் அதிகம் நடந்தது. இந்த மோதல் உலகக் கோப்பையிலும் தொடரும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இரு நாட்டு வீரர்களும் சமத்துப் பிள்ளையாக விளை யாடிய பொழுதிலும் ரசிகர்கள் கேலி கிண்டல் மூலம் பிரச்சனையைத் தூண்டிவிட்டனர். இந்திய கேப்டன் கோலியால் மோதல் வாய்ப்பு கானல் நீரைப் போன்று காணாமல் போனது.