மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர ஆல்ரவு ண்டரான டுவைன் பிராவோ 2004-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக மானார். சுமார் 14 வருடம் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு பல்வேறு வகையில் உதவிய பிராவோ கடந்த 2018- ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டி லிருந்து திடீரென ஓய்வு பெற்றார். அதன் பின்பு ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் களமிறங்கி பல்வேறு சாதனைகளைப் படைத்து வந்த நிலையில், தன்னுடைய ஓய்வு அறி விப்பை வாபஸ் பெறுவதாக அறி வித்துள்ளார். பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்று மீண்டும் கிரிக்கெட் விளையாட வருவது அரிதான செயல் என்றாலும் இதற்கு முன் பிராவோ போன்று நிறைய நபர்கள் ஓய்வு அறிவித்து மீண்டும் கிரிக்கெட் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.