விளையாட்டு உலகின் முக்கிய திருவிழாவான ஒலிம்பிக்கில் அனைத்து வகையான விளையாட்டுப் பிரிவுகள் இருந்தாலும், முன்னணி விளை யாட்டான கிரிக்கெட் மட்டும் இடம்பெறாதது நாள்பட்ட சர்ச்சையாக உள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்ப தற்காகச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தீவிரமாகப் போராடி வரும் நிலையில், 2028-ஆம் அமெரிக்காவின் முக்கிய நகரான லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் (கோடை) கிரிக்கெட் விளையாட்டு சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐசிசி தரப்பு மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இதனை நிரூபிக்கும் வகையில் உலக கிரிக்கெட் கமிட்டி (எம்சிசி) தலைவர் மைக் கேட்டிங் கூறியதாவது,”கிரிக்கெட் விளையாட்டு நீடித்து இருக்க ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வேண்டும். ஒலிம்பிக் தொடர் இரண்டு வாரங்களே நடக்கவிருப்பதால் முறையான திட்டமிடல் செய்துவிட்டால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை திட்டமிடு வது எளிமையாக இருக்கும். அதன் முதல் படியாகத் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்துடன் இணைந்து செயல்பட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது. அடுத்த 18 மாதங்களில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்ப்பது குறித்த ஐசிசி-யின் நடவடிக்கை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியைச் சேர்த்துவிட்டால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசத்தைத் தரும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விளையாட அனைத்து நாடுகளும் இணங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். எனினும் ஐசிசி ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தி டம் இன்னும் திடமான பேச்சுவார்த்தை நடத்த வில்லை. ஒலிம்பிக் தொடரில் கலந்துகொள் வதற்கான நடவடிக்கையை மட்டுமே ஐசிசி கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.