வண்டலூர் அருகே மாணவர்களிடையே நடந்த வாக்குவாதத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் முகேஷ் என்ற மாணவர் படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்களம் பகுதியில் முகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இன்று அவரது நண்பரான விஜய், உதயா வீட்டில் முகேஷ் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது விஜய் முகேஷ்சை துப்பாக்கியால் சுட்டு விட்டு தலைமறைவாகி உள்ளார். அப்போது வெளியில் இருந்த உதயா துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது முகேஷ் படுகாயங்களுடன் இருந்துள்ளார். இதையடுத்து விஜய் தம்பி உதயா முகேஷ் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட முகேஷ் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உதயாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.