காஞ்சிபுரம்,நவ.4- காஞ்சிபுரம் பெருநகராட்சியில் 51 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். மேலும் இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து 27வது வார்டு திருக்காலிமேடு பகுதி யில் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த ப்பட்டதால் குப்பைக் கிடங்கு அருகே மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரிப்பதற்காக கிடங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நகரப்பகுதியில் நாள் ஒன்றுக்கு 65 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் 15 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன. நத்தப்பேட்டை ஏரிக்கரை யில் கடந்த பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படா மல் உள்ளது.மேலும் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவ விழாவின் போது சேரிக்கப்பட்ட குப்பையும் இங்கே டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்கப்படாமல் கடந்த பல ஆண்டுகளாக அப்படியே குப்பையைக் கொட்டுவதால் பிளாஸ்டிக் பொருட்கள் அப்படியே தேங்கி மலைபோல் குவிந்து கிடக்கிறது. மேலும் மழைக் காலங்களில் பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர் தேங்கி விடுவதால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஇஸ் கொசுக்கள் உற்பத்தியாவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். கழிவு நீர் ஏரி
நகராட்சியின் கழிவு நீரை சுத்தம் செய்யப்படாமல் அப்படியே நத்தப்பேட்டை ஏரியில் விடப்படு கிறது. இதனால் கழியனூர், வள்ளு வப்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயி கள் வேதனையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் பெருநகராட்சி செயலாளர் சி.சங்கர் கூறியதாவது:- நத்தப்பேட்டை ஏரியில் குப்பை கொட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டோம். இதற்கு குப்பை கொட்டுவதற்கான இடம்நக ராட்சிக்கு பொதுப்பணித்துறை சார்பில் ஒதுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் கழிவுநீர் சுத்திகரித்து விடுவதற்கான கோப்புகள் ஏதும் நிர்வாகத்திடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் நகராட்சி பகுதியி லிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நத்தப்பேட்டை, கழியனூர், வள்ளுவப்பாக்கம் உள்ளிட் ஏரி வழியாக அடையாறு வரை சென்று கலக்கிறது. இதனல் வழி எங்கும் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. நகராட்சி குப்பைகளையும் கழிவு நீரையும் மறு சுழற்சி செய்வதற்கான மாற்று ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை. தற்போது நத்தப்பேட்டை ஏரியில் கொட்டப்படும் குப்பை அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றது. நகராட்சி பகுதி முழுவதும் நிர்வாகத்தின் சார்பில் குப்பைகள் சரியான முறையில் கொட்டப்படாத காரணத்தால் நகரம் முழுவதும் டெங்கு கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழ்நாடு விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு கூறுகையில், குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பையால் நோய்த் தொற்று மற்றும் காற்று மாசு ஏற்படாமல் இருப்பதற்காக நகராட்சி நிர்வாகம் மருந்து தெளிக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டு களாக எந்தவித தடுப்பு மருந்துகளும் தெளிக்கப்படவில்லை. காஞ்சிநகர் முழுவதும் டெங்கு கொசு பரவிவருகிறது. டெங்கு கொசு உற்பத்தி செய்வதாக பல்வேறு தரப்பினருக்கு அபராதம் விதித்து வரும் நகராட்சி நிர்வாகம் குப்பைக் கிடங்கில் டெங்கு கொசு உற்பத்தி செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதிக்க வேண்டும். குப்பையைத் தரம் பிரிப்பதற்காக பலகோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உரம் தயாரிப்பு பூங்கா பயன்படுத்தப்படாமல் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் குப்பைக் கிடங்கில் டெங்கு கொசுவை உற்பத்தி செய்து வரும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.