காஞ்சிபுரம், ஜூன் 7- மனவளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய இருவருக்கு மூதாட்டியின் வேண்டு கோளை ஏற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உதவித் தொகையை வழங்கினார். காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிரா மம் ரயில்வே கேட் அருகே பச்சையம்மாள் (65) என்பவர், உடல் வளர்ச்சி குறைபாடு, மனவளர்ச்சி குன்றிய மகன் முனுசாமி (35), தனது தம்பி பிச்சாண்டியுடன் (40) வசித்து வருகிறார். ரயில்வே கேட்டை ஒட்டிய புறம்போக்கு நிலத்தில் சிறிய அறை ஒன்றில் மூவரும் வசித்து வருகின்றனர். பச்சையம்மாளின் கணவர் சற்று மனவளர்ச்சி குன்றி இருப்பதோடு, மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, வேலூர் மாவட்டம் மோச்சூரில் அவரது தம்பியின் பராமரிப்பில் வசித்து வருகிறார். உடல் குறைபாட்டுடன், மன வளர்ச்சி குறைந்த வாலிபர்களுடன் இந்த மூதாட்டி பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்.
பிச்சாண்டிக்கு மட்டும் அரசின் உதவித் தொகை ஆயிரம் ரூபாய் கிடைத்து வந்தது. பச்சையம்மாளுக்கும். முனுசாமிக்கும் அரசின் உதவித்தொகை ஏதும் கிடைக்க வில்லை. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியகாஞ்சிபுரம் கிளை செயலா ளர் ரகுபதி செய்தியாளர்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆட்சியரின் உட னடி உத்தரவையடுத்து, மாற்றுத் திறனாளி கள் நலத் துறையினர் பச்சையம்மாள் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி கொரோனா நிவாரணம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை யன்று (ஜூன் 6) பிச்சாண்டி, முனுசாமி இருவ ருக்கும் தலா 1500 ரூபாய் உதவித் தொகைக் கான உத்தரவும், அரிசி பருப்பு எண்ணெய் போன்ற நிவாரணப் பொருட்களும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையினரால் வழங்கப் பட்டது. இந்த நிதியுதவி கிடைத்ததால் நெகிழ்ந்து போன பச்சையம்மாள், பிரச்சனையை ஆட்சி யரின் கவனத்திற்கு கொண்டு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உதவி தொகை வழங்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சி யருக்கும், மாற்றுத்திறனாளிகள் துறைக்கும் நன்றி தெரிவித்தார்.