மதுராந்தகம், ஜூன் 17- மாற்றுத்திறனாளிக ளுக்கு உதவித்தொகை கேட்டு மனு கொடுக்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மதுராந்தகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சேனியர்மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் மாற்றுத் திறனாளிகளான அமரேசன், ராஜ் ஆகியோருக்கு உதவித் தொகை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மது ராந்தகம் வட்டச் செயலாளர் கே.வாசுதேவன், வட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.அர்ஜூன்குமார் ஆகியோர் கடந்த மாதம் 14ம் தேதி வட்டாட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர். அப்போது, வட்டாட்சியர் பர்வதம் தரக்குறைவாகப் பேசியதுடன் அவமரியாதை யாக நடந்துள்ளார். வட்டாட்சியர் பர்வதம் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சி யர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மனு கொடுத்தது. ஆனால் இது வரை நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில் வட்டாட்சி யர் பர்வதம் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மதுராந்தகம் தேரடி வீதியல் ஆர்ப்பாட்டம் திங்களன்று (ஜூன் 17) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் கே.வாசு தேவன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.கிருஷ்ண ராஜ், எஸ்.ராஜா, வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.அர்ஜூன்குமார், வி.பொன்னு சாமி, கிளை செயலாளர்கள் துளசி, வனிதாமணி உள்ளிட்ட பலர் பேசினர்