காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஓய்வு பெற்ற காவல் துறையினர் நலச் சங்கம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற காவல்துறை சங்க மாவட்டத் தலைவர் பி.வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.