tamilnadu

img

வேட்டைக்காரன் இன மக்கள் வாழும் பகுதிகளில் கள ஆய்வு நடத்த கோரி மனு அளித்தனர்

காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் வேட்டைக்காரன் இன மக்கள் வாழும் பகுதிகளில் கள ஆய்வு நடத்தி அரசிற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலச் செயலாளர் இ.கங்காதுரை, மாநிலத் தலைவர் எம்.சேட்டு ஆகியோர் உதகமண்டலத்தில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் தங்களிடம் உள்ள ஆதாரங்களையும் கோரிக்கை மனுவை அளித்தனர். இதில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் எஸ். சின்னையா, கிருஷ்ணன், லட்சுமணன், மணி, வீராசாமி, வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.