tamilnadu

திருப்போரூரில் பருவமழை சிறப்பு அலுவலர் ஆய்வு

திருப்போரூர், அக்.22-  காஞ்சிபுரம் மாவட்ட த்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மழைக்கான முன்னேற்பாடு களை கண்காணிப்பதற்காக 11 சிறப்பு கண்காணிப்பாள ர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர்.  திருப்போரூர் வட்ட த்துக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் மதி வாணன் மற்றும் திருக்கழு க்குன்றம் வட்டத்துக்கு தமிழ்நாடு காகித நிறுவன த்தின் இயக்குநர் சிவசண்முக ராஜா ஆகியோர் நியமிக்கப்ப ட்டுள்ளனர். இந்நிலையில், கட லோரப் பகுதி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் உள்ள ஏரி மற்றும் அதன் கரைகளின் நிலை குறித்து, திருப்போரூர் வட்ட கண்காணிப்பாளர் மதிவா ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இதேபோல், திருக்கழு க்குன்றம் வட்ட கண்காணி ப்பாளரும் பல்வேறு பகுதிக ளில் செவ்வாயன்று (அக்.22) ஆய்வு மேற்கொண்டார். மேலும், தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்ட கிராமங்களில் உள்ள பொது மக்களுக்காக ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ள தற்காலிக அறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினர்