tamilnadu

காஞ்சிபுரம், திருவள்ளூர் முக்கிய செய்திகள்

பிரதமர் - சீன ஜனாதிபதி வருகையால் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில்  அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும்
காஞ்சிபுரம், அக்.9- பிரதமர் மோடி - சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வரு கையையொட்டி மாமல்ல புரம் நகரம் முழுவதும் தீவிரமாக கண்காணி க்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாமல்ல புரம் நகரத்துக்குள் அரசுப் பேருந்துகள் வர தடை விதிக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. மாமல்ல புரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூஞ்சேரி என்ற இடத்தில் அரசுப் பேருந்துகள் நிறுத்த ப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு போக்கு வரத்துக் கழகம் சார்பில் சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு 147  பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. அதே போல் தாம்பரம், செங்கல்ப ட்டில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் 90 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த அரசுப் பேருந்துகள் இ.சி.ஆர். சாலையில் சென்று வருகின்றன. அரசுப் பேருந்துகள் அனைத்தும் பூஞ்சேரியி லேயே நிறுத்தப்பட்டு பயணி கள் இறக்கி விடப்படு வார்கள். இதற்காக அங்கு தற்காலிக  பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால் மாமல்லபுரம் நகரத்துக்குள் அரசுப் பேருந்துகள் செல்ல முடியாது. இந்த தடை சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தில் இருந்து செல்லும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி க்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் மாமல்லபுரம் அருகே இ.சி.ஆர். சாலையை தவிர்த்து மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோ, ஷேர் ஆட்டோ க்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறும் கேட்டு க்கொள்ள ப்பட்டுள்ளன. மாமல்லபுரம் நகருக்குள் வராமல் மாற்றுப்பாதையில் செல்லுமாறு வாகன ஓட்டி களுக்கும் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

திருவள்ளூரில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த  45 நடமாடும் மருத்துவக்குழு
திருவள்ளூர், அக்.9-  திருவள்ளூர் மாவட்ட த்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்ப ட்டு வருகிறது. இதனடிப்படையில் வியா ழனன்று (அக்.9) 45 நடமாடும் மருத்துவக்குழுவை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் கூறியதா வது:- 45 நடமாடும் மருத்துவக் குழுவில் ஒரு வாகனத்தில் ஒரு மருத்துவர் ஒரு செவிலி யர் ஒரு உதவியாளர் மற்றும் ஓட்டுநர் இருப்பார்கள். இவர்கள் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. எல்லா காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல. நோய்தடுப்பு நடவடிக்கை கள் போர்க்கால அடிப்படை யில் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் செயல்பட க்கூடிய 044 27664177 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் உடனடியாக நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும். மேலும் மர்மக் காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாமல் நேரடி யாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.