tamilnadu

காஞ்சிபுரத்தில் கொரோனா அறிகுறி நபர் தீவிர கண்காணிப்பு

 காஞ்சிபுரம், மார்ச் 24- கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்று திரும்பிய பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல நகை வியாபாரியின் மகன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வைரஸ் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் திங்கட்கிழமை (மார்ச் 24 )இரவு அக்குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கேரளா சென்று வந்த காஞ்சிபுரம் நெசவாளிக்கு இருமல் சளி காய்ச்சல் இருந்ததால் தொற்று நோய் அறிகுறி உள்ளதா என ரத்த மாதிரி எடுக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

 

 

;