tamilnadu

img

இந்தியத் தொழிற்சங்க மைய மாநில மாநாடு கொடியேற்றம் 

இந்தியத் தொழிற்சங்க மையத்தின் 14வது மாநில மாநாடு வருகின்ற 19 முதல் 22 வரை காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.14 வது மாநாட்டைப் பறைசாற்றும் விதமாகச் செவ்வாயன்று (செப்.10) 14 கொடிகள்  ஏற்றப்பட்டன. கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ஜீவா தலைமை வகித்தார். லட்சுமிபதி முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் கொடியேற்றி வைத்து மாநாட்டின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார் . மாநாடு வரவேற்புக் குழு பொருளாளர் ஒய்.சீதாராமன்,சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி. வசந்தா, அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க துணைத் தலைவர் மதுசூதனன், கைத்தறி சங்க நிர்வாகிகள், பகுதி தோழர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;