tamilnadu

img

இடிந்து விழும் அபாயத்தில் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளி

மதுராந்தகம், நவ.13- காஞ்சிபுரம் மாவட்டம், படாளம் ஊராட்சியில் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் படாளம், புலிப்பரக்கோயில், பாத்தூர், பழையனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாண வர்கள் படித்து வருகின்ற னர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 6 ஆசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் நான்கு கட்டங்கள் உள்ளது. இதில் கடந்த 2005 ஆம் ஆண்டு மற்றும் 2006 ஆம் ஆண்டு மூன்று வகுப்பறைகள் கொண்ட 2 கட்டடங்கள் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.  மேலும் கட்டடத்தில் விரிசல் விட்டுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சத்தில் ஆசிரியர்களும் மாணவர்க ளும் உள்ளனர். இதனால் பாதிப்படைந்த கட்டடத்தில் உள் மூன்று வகுப்பறை க்குள்ளும் பூட்டிவைக்க ப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், ‘மாணவர்கள் நலன் கருதி அந்த கட்டடம் கடந்த 7 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் அலுவலர்க ளுக்குக் கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் நட வடிக்கை எடுக்காமல் உள்ளனர் ’ என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ராஜா கூறுகையில், ‘ நூறு ஆண்டு களைக் கடந்த அரசுப்பள்ளி கட்டிடங்கள் கூட நல்ல தர மாக இன்னும் உள்ளது. ஆனால் படாளம் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி யின்  கட்டிடம் 15 ஆண்டு கள் வரை கூட தாக்கு பிடிக்காமல் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பள்ளி மாணவர்களுக்கு கட்ட டத்தால் ஏதும் விபத்து ஏற்படு வதற்கு முன்பு பாதிப்படை ந்த கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட நட வடிக்கை எடுத்திட வேண்டும்’ என்றார்.