கல்பாக்கம், ஜூன் 22- கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. இங்கு தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்தவர் பாஸ்கர் (46) கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி திங்களன்று (ஜூன் 22) உயிரிழந்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவரான மறைந்த குமாரின் சகோதரர் பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கர் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அணு மின் ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.