tamilnadu

விளையாட்டுப் போட்டியின் போது ஒலிம்பிக் ஜோதி வெடித்ததில் படுகாயமடைந்த மாணவர் பலி

காஞ்சிபுரம், செப்.9- காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 30 ஆம் தேதி விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அப்போது, போட்டியின் துவக்கத்தில் ஒலிம்பிக் ஜோதியை விளையாட்டு மைதானத்தை சுற்றி வர ஏற்பாடுகள் செய்து வந்தனர்.  இதனையடுத்து விக்னேஷ் என்ற மாணவன் ஒலிம்பிக் ஜோதியை எடுத்து ஓடி வந்துகொண்டிருந்தார். அப்போது, ஜோதி திடீரென வெடித்தது. இதில் விக்னேஷ் மார்பு மற்றும் முகம் உள்ளிட்ட  பகுதிகளில் பலத்த தீக்கா யங்கள் ஏற்பட்டது. உடனே அவரை  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி விக்னேஷ் ஞாயிறன்று உயிரிழந்தார்.  இந்நிலையில், மாணவன் உயிரி ழதந்தைத் தொடர்ந்து  பள்ளிக்கு 3 நாள் தொடர் விடுமுறை அளித்துள்ளது பள்ளி நிர்வாகம். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.