tamilnadu

செம்மரக்கட்டைகள் பறிமுதல்

காஞ்சிபுரம், பிப்.24-  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் முத்து என்பவர் பழைய இரும்புக் கடை வைத்துள்ளார். இவர் செம்மரக் கட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் முத்துவின் கடைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது 300 கிலோ எடை கொண்ட 6 செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை பிறிமுதல் செய்து  முத்துவை கைது செய்தனர்.