காஞ்சிபுரம், செப். 19- தொழிலாளர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும் இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு)வின் தமிழ் மாநில 14ஆவது மாநாடு காஞ்சிபுரத்தில் தோழர் கே.எஸ்.பார்த்தசாரதி நகரில் தோழர்கள் வி.வி.கிருஷ்ணமூர்த்தி, எல்.தியாகராஜன் நினை வரங்கில் (அருணா மஹால்) வியாழனன்று (செப். 19) எழுச்சியுடன் துவங்கியது. துவக்க நிகழ்வாக தூத்துக்குடியில் இருந்து தொடர் பயணமாக காஞ்சிபுரத்திற்கு கொண்டுவரப்பட்ட மாநாட்டுக் கொடியின் பயணத்தை மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். மாநாட்டு அரங்கில் மாநிலச் செயலாளர் ஆர்.ரசல், மாநாட்டுக் கொடியை வழங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம் பெற்றுக் கொண்டார். சென்னை ஓட்டேரியில் இருந்துகொண்டு வரப்பட்ட தோழர் வி.பி.சிந்தன் நினைவு ஜோதியை மாநிலச் செயலாளர் சி.திரு வேட்டை வழங்க மாநிலச் செயலாளர் எம்.மகாலட்சுமி பெற்றுக் கொண்டார். பின்னர் அண்ணா அரங்கத்தில் இருந்து வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க தலைவர் களும், பிரதிநிதிகளும், செந்தொண்டர்களும் பேரணியாக மாநாட்டு அரங்கிற்கு வந்தனர். பிரதிநிதிகளின் உணர்ச்சிகர முழக்கங் களுக்கு இடையே மாநிலக் குழு உறுப்பி னர் கே.பழனிவேலு மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தியாகிகள் நினை வாக அமைக்கப்பட்டிருந்த ஸ்தூபிக்கு தலை வர்களும் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தி னர்.
பொதுமாநாடு
பொது மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு தலைவர் எஸ்.கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். உதவி பொதுச் செயலாளர் வி.குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். அகில இந்திய துணைத் தலை வர் ஏ.கே.பத்மநாபன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். தோழமை தொழிற்சங்கத்தலைவர்கள் மு.சண்முகம் (தொமுச), டி.எம்.மூர்த்தி (ஏஐ டியுசி), சுப்பிரமணி (எச்.எம்.எஸ்.), அன வர்தன் (ஏஐயுடியுசி) ஏ.எஸ்.குமார் (ஏஐசிசிடியு) ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.
பிரதிநிகள் மாநாடு
பிற்பகல் பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. சிஐடியு அகில இந்தியத் தலைவர் டாக்டர் கே.ஹேமலதா துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் மாலதி சிட்டிபாபு வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இந்த அறிக்கை மீது விவாதம் தொடங்கியது.சனிக்கிழமை வரை பிரதிநிதிகள் விவாதம் நடைபெறும். ஞாயிறன்று மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தொகுப்புரை வழங்குகிறார்.
பேரணி - பொதுக்கூட்டம்
சிஐடியு மாநில மாநாட்டின் நிறைவு நாளான செப். 22ஆம் தேதி மாலை சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் மாநாட்டுப் பேரணியும் காந்திரோடு தேரடியில் அகில இந்திய மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.