காஞ்சிபுரம்,டிச.23- காஞ்சிபுரத்தில் மாயா பதிப்பகம் மற்றும் எம்பரர் குரூப் ஆப் சேனல்ஸ் சார்பில் வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மற்றும் பல்கலை க்கழக பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிறன்று (டிச.22) நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் முனைவர் சி.திருச்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை துவக்கி வைத்தார். பின்னர் விழா மலரை வெளியிட்டார். இதை கொச்சின் பல்கலைக்கழக பொருளாதார துறைத் தலைவர் முனைவர் அருணாச்சலம் பெற்றுக்கொண்டார். பின்னர் இவர்கள் பேராசிரியர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.மாயா பதிப்பகத்தின் இயக்குனர் முனைவர் ஆர்.மாயக்கண்ணன், உதவிப் பேராசிரியர் முனைவர் பாலமுருகன், நாகாலாந்து பல்கலைக்கழக பேராசிரியர் சுதா ஆகியோர் பங்கேற்றனர்.