tamilnadu

img

மாமல்லபுரம் கடற்கரையில் பராமரிப்பு இல்லாத சிற்பங்கள்

மாமல்லபுரம், செப்.11- காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்ல புரத்தில் பல்லவ மன்னர்களின் குடவரை கற்சிற்பக் கலையைப் பறை சாற்றும் வகையில், கடற்கரை கோயில், ஐந்துரதம், கிருஷ்ண மண்டபம், அர்ஜூனன் தபசு மற்றும் சாளுவான் குப்பத்தில் உள் புலிக்குகை உள்ளிட்ட பாரம்பரிய கலை சின்னங்களை தொல்லியல்துறை பாதுகாத்து, பராமரித்து வருகிறது.  மேலும், கடற்கரையில் பல்லவ மன்னர்களின் காலத்தில் வடிவமை க்கப்பட்ட குதிரை, யானை, புலி உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் அமைந்துள்ளன. கடற்கரைக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இச்சிற்பங்கள், முறையான பராமரிப்பு இல்லாததால்  பொலிவிழந்து வருகிறது.  கடற்கரையில் உள்ள சிற்பங்க ளின் அழகையும் அதன் முக்கியத்து வத்தையும் உணராமல் சிலர் அதை சேதப்படுத்துகின்றனர். எனவே கடற்கரையில் உள்ள சிற்பங்களை வேலி அமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.