கொரோனா நோய் தொற்று காலத்தில் நுண் நிதி நிறுவனங்கள் மாதத் தவணையை கட்டாயப்படுத்தி வசூலிப்பதைக் கண்டித்தும், ஜனவரி மாதம் வரை மாதத் தவணை வசூலிப்பதை நிறுத்தி வைக்கக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திங்களன்று (ஆக. 31) உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க நகரச் செயலாளர் வி.சந்திரா, வாலிபர் சங்க நகரத் தலைவர் ஏ.ராமராஜன் தலைமை தாங்கினர். இதில் மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.தேவி, செயலாளர் இ.அலமேலு, மாநிலக்குழு உறுப்பினர் ஆ.சுபாஷினி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, செயலாளர் வே.ஏழுமலை, பொருளாளர் வி.மார்த்தாண்டன் ஆகியோர் பேசினர். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.