tamilnadu

img

போக்குவரத்து சீர் செய்யப்படும் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய எஸ்பி பேட்டி

கள்ளக்குறிச்சி, நவ. 19- கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஜெயச்சந்திரன்  பொறுப் பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு இவர் மதுரை  6 வது பட்டாளியன் கமாண் டன்ட்டாக பணிபுரிந்து தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய  எஸ்.பியாக நியமிக்கப் பட்டுள்ளார். எஸ்.பி.ஜெயச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போக்குவரத்து சீர் செய் யப்படும். விபத்துகளை குறைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்” என்றார். பெண்கள், குழந்தை களின் நலன் பாதுகாக்கப்ப டும். பொதுமக்களின் குறை கள் மீது காவல் நிலையங்க ளின் வாயிலாக, அதிகாரி களைக் கொண்டு தீர்க்கப்ப டும் என்றும் அவர் கூறினார். கள்ளச்சாராயம், கஞ்சா, கள்ளத் துப்பாக்கி, திருட்டு சம்பவங்கள் போன்றவற்றில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு அவைகள் களையப்ப டும் எனவும் உறுதியளித்தார்.  புதிதாக பொறுப்பேற்றுக்  கொண்ட எஸ்.பி கள்ளக் குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, உட்கோட்ட காவல் கண்கா ணிப்பு பகுதி மற்றும் மூன்று அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மூன்று போக்குவரத்து காவல் நிலை யங்கள், மூன்று மதுவிலக்கு  காவல் பிரிவு காவல் நிலை யங்கள், 19 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ள டக்கிய காவல் பகுதிகளுக்கு  இவர் காவல் கண்காணிப்பா ளராக பணி நிர்வகிப்பார்.