உளுந்தூர்பேட்டை, ஜூலை 7- அரசு இடம் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து புகார் அளித்தவர் விபத்தில் மரணமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட தாக அவர்களது உறவினர்கள் உடலை அடக்கம் செய்யாமல் மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றி யத்தைச் சேர்ந்த விஜயங்குப்பம் கிராமத்தில் வசித்த வர் மணிகண்டன் (40). இவர் அங்குள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்ததை தடுக்கக் கோரியும், மீட்கக் கோரியும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அனுப்பியுள்ளார். மேலும் அந்த இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நூலகம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பொது இடத்தை ஆக்கிர மித்து இருந்த ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு கட்டடம் கட்டியுள்ளனர். இதனை எதிர்த்து கடந்த சனிக்கிழமை (ஜூலை 4) பிற்பகலில் உளுந்தூர் பேட்டை வட்டாட்சியரிடம் மணிகண்டன் மனு அளித்துள்ளார். பின்னர் தனது நண்பர் வீரபாண்டிய னோடு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது, உளுந்தூர்பேட்டை அருகே யுள்ள நகர் ரயில்வே மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் இரு சக்கர வாகனம் மோதி தலையில் காயமடைந்து மணி கண்டன் இறந்துள்ளார். உடன் வந்த நண்பர் வீரபாண்டி யன் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மணிகண்டனின் மனைவியும், உறவினர்களும் விஜயங்குப்பம் கிராமத்தில் பொது இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த நபர்கள் சனிக் கிழமையன்று மாலை மணிகண்டன் வந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் காரால் மோதி விபத்தை ஏற் படுத்தி கொன்று விட்டதாக கூறி, உடலை அடக்கம் செய்யாமல் திங்களன்று (ஜூலை 6) விஜயங்குப்பத்தில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், வருவாய் வட்டாட்சியர் காதர்அலி ஆகி யோர் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும், அரசு இடத்தை அளவீடு செய்து ஆக்கிர மிப்புகள் அகற்றப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.