கள்ளக்குறிச்சி, ஆக. 9- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று சமூக பரவ லாக தீவிரமடைந்து வருவதை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.17ஆம் தேதி போராட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மின்னஞ்சலில் அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆறாம் தேதி நிலவரப்படி கொரோனா நோய் தொற்றினால் 4,131 பேர் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். கட்சியின் சார்பில் மார்ச் 26 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை 11 மனுக்களில் நோய்த்தொற்றை கட்டுப்ப டுத்துவதற்கு சாத்தியமான 52 வழிமுறை களை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தோம்.
இவற்றில் பெரும்பாலானவற்றை நிறை வேற்றாததால் மாவட்டத்தில் நோய்த்தொற்று சமூக பரவலாக தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது மக்களை கவலையிலும், அச்சத்தி லும் ஆழ்த்தியுள்ளது. இத்துடன் ஆண்டுதோறும் பருவ மழைக் காலங்களில் ஏற்படும் மலேரியா, டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில்தான் கட்சியின் சார்பில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உரிய நட வடிக்கை எடுக்கக்கோரி வரும் 17ஆம் தேதி மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். எனவே கீழ்க்கண்டவற்றை நிறைவேற்ற வேண்டும். உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு இடங்களில் பிசிஆர் பரிசோ தனைக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் சம்பந் தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். தொற்று அதிகமாக உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் முழு பொதுமுடக்கத்தை அமுலாக்க வேண்டும். அங்கு வசிக்கும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.
ஊராட்சி அளவிலும், நகரங்களில் வார்டு அளவி லும் வருவாய், உள்ளாட்சி மற்றும் சுகா தாரத்துறை ஊழியர்களை ஒருங்கி ணைத்து செயல்படவும், இவர்களுக்கு உதவி யாக உள்ளூர் மட்டத்தில் தன்னார்வ லர்களை கொண்ட சமூகப் பாதுகாப்பு குழுக்களையும் அமைத்து, அந்தக் குழு வின் மூலம் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் தரமான உணவு, போதிய படுக்கைகள், கழிப்பிட வசதி, சுகாதார பராமரிப்பு, உயர்தர மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும். ஒவ்வொரு சிகிச்சை மையத்திற்கும் ஒரு கண்காணிப்பு அதி காரியை நியமிக்க வேண்டும். ஆண்டு தோறும் பருவ மழைக் காலங்களில் ஏற்படும் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களை தடுத்திட மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சா ரம் செய்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.