இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (எல்.ஐ.சி) கள்ளக்குறிச்சி கிளை சார்பில் காப்பீட்டு பிரிமியங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை ரத்து செய்யக்கோரி கள்ளக்குறிச்சியில் வெள்ளியன்று (செப் 27) சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு கையொப்பமிட்டு துவக்கி வைத்தார். சங்கத்தின் செயலாளர் க.வேலாயுதம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.