tamilnadu

img

சிபிஎம் மூத்த தலைவர் எம்.சின்னப்பா காலமானார்....

சங்கராபுரம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத் தலைவர்களில் ஒருவரும் தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளருமான அரசம்பட்டு எம்.சின்னப்பா உடல் நலக்குறைவால் வெள்ளியன்று (ஜன.1)  மாலை 7 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 69.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் கிராமத்தை சேர்ந்த தோழர் எம்.சின்னப்பாவிற்கு சாவித்திரி என்ற மனைவியும், சுபா சக்திவேல், சுதா இளையாப் பிள்ளை, அம்பிகா டெக்ஸ், காயத்திரி அறிவுக்கரசு  ஆகிய நான்கு திருமணமான மகள்களும் உள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக மருத்துவ சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார்.

அன்னாரது மறைவிற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், கோ.மாதவன், ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள் ளிட்டோர்  மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, சிபிஎம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், திமுக ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோரும் சின்னப்பா உடலுக்கு மலர் வைத்து அஞ் சலி செலுத்தினர்.சங்கராபுரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள் ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அடக்கம் செய் யப்பட்டது.

;