கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் எந்தவித ஆவணமும் இல்லாமல் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒருவர் நிலத்தை இன்னொருவருக்கு பட்டா மற்றும் சிட்டா மாற்றம் செய்து கொடுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும். நில மோசடிக்கு துணை போகும் இதர அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மலைவாழ் மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஒன்றியச் செயலாளர் வி.அண்ணாமலை தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ.செல்வராஜ், பி.சடையன், ஏ.ராமன், டீ.வெள்ளையன், டி.தங்கராசு, எஸ்.ஆண்டி, சி.ஜெய்குரு, ஏ.ஏழுமலை உட்பட 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.