கள்ளக்குறிச்சி, ஜூன் 7- தொன்மை சிறப்பு மிக்க பாரம்பரியமான தமிழக கிரா மியக் கலைகளை தொடர்ந்து நடத்திவரும் கலைஞர்க ளையும், கலைக் குழுக்களை யும் ஊக்குவிக்கும் வகை யில் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன் கள் வாங்க ஒவ்வொரு கலை ஞருக்கும் 5 ஆயிரம் ரூபாய் வீதம் 500 பேருக்கும், ஒவ்வொரு கலைக்குழு விற்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் 100 கலை குழுக்க ளுக்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படு கிறது. இதற்கான தகுதிகளாக 31 மார்ச் 2020 ஆம் ஆண்டு 16 வயது நிறைவடைந்தும், 30 வயதுக்கு உட்பட்டவராக வும் இருக்க வேண்டும். கலைக்குழுக்கள் தங்களது நிறுவனத்தை பதிவு செய்தி ருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்படு கிறது. தபால் மூலம் பெற விரும்பும் கலைஞர்கள் மற் றும் கலைக்குழுக்கள் சுய முகவரியிட்ட உறையில் 10 ரூபாய்க்கான தபால் தலை ஒட்டி அதனை மன்றத்திற்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31 பொன்னி பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை 28 என்ற முகவரிக்கு 2020 ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப் பங்கள் நேரிலோ அஞ்சல் மூலமோ கிடைக்கும் வகை யில் அனுப்பி வைக்க வேண் டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்கு ராலா தெரிவித்துள்ளார்.