சுகாதார துணை இயக்குநர் வீட்டில் சோதனை
கள்ளக்குறிச்சி, ஜூலை 25- தஞ்சாவூரில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குன ராக பணியாற்றி வரும் மருத்துவர் சுப்பிரமணியனின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம். இவரது வீட்டில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தேவநாதன் தலைமையில் 7 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அவரை விசாரணைக்காக சின்னசேலம் அழைத்துச் சென்றனர். சோதனை தொடர்பாக காவல் துறை யினரிடம் கேட்டபோது, புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தி வருவதாகவும், சில ஆவணங்கள் சிக்கியிருப்ப தாகவும் தெரிவித்தனர்.
சென்னையில் தொடர் கருச்சிதைவால் பாதிக்கும் தம்பதியினருக்கு உதவி
சென்னை,ஜூலை 25-கருத்தரிக்க விரும்பும் தம்பதியினரிடையே, கருத்தரிக்க இயலாமை இன்று ஒரு முக்கியமான பொது பிரச்சனை யாக அதிகரித்து வருகிறது. மேலும், தற்போது உலகம் முழுவதிலும் கருத்தரிக்க முயலும் தம்பதிகளில் 10 முதல் 15விழுக்காட்டினர் பேர் கருத்தரிக்க இயலாமையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், கருத்தரிக்க இயலாத தம்பதியினருக்கு உடல், மனம், சமூகம் மற்றும் பாலியல் ரீதியிலான பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை கருத்தரிப்பு தொடர்ந்து தோல்வியில் முடிந்த தம்பதிகள் புதிய தொழில்நுட்ப மூலமாக ஆரோக்கியமான கருவை தரிக்கமுடி யும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டியின் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணார் டாக்டர். கிருத்திகா தேவி கூறினார். நவீன மருத்துவ நடைமுறைகள், கருமுட்டைகளில் இருக்கும் குரோமோசோம் குறைப்பாடுகளைக் கண்டறிந்து, அதன் மூலம் உண்டாகும் தொடர் கருச்சிதைவுகளில் இருந்து தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்றார் அவர். “முதல் மூன்று மாதங்களில் உண்டாகும் பெரும்பாலான கருச்சிதைவுகள் குரோமோசோம் அல்லது மரபணு குறைப்பாட்டால் உண்டாகுகின்றன. நவீன மருத்துவ நடை முறைகள் கருக்களை ஆராய்ந்து அறிந்து குரோமோசோம் குறைப்பாடுடன் இருக்கும் கருக்களை ஆரம்பத்திலேயே நீக்குவதற்கு உதவுகின்றன. மேலும் பாதிப்பு இல்லாத கருவைத் தேர்ந்தெடுப்பதால், தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது’’ என்றும் அவர்கூறினார்.
விவசாயி வீட்டில் நகை- பணம் கொள்ளை
பண்ருட்டி, ஜூலை 25-கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது சிறுகிரா மம். இந்த பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 72).விவ சாயி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்கள் குடும்பியான் குப்பத்தில் பண்ருட்டி- சேலம் மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 19-ந்தேதி கணவனும் மனைவியும் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனை அறிந்த மர்ம மனிதர்கள் இரவில் ராமமூர்த்தியின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை- பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டனர். வெளியூர் சென்று இருந்த ராம மூர்த்தி வீட்டுக்கு வந்தபோது பீரோ திறந்து கிடப்பதையும் பொருட்கள் சிதறி கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை- பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கபட்டிருப்பது தெரியவந்தது.