tamilnadu

img

கல்வி பாதுகாப்பு பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி, செப். 26- தேசிய கல்வி கொள்கை 2019-ஐ திரும்பப் பெறக் கோரி தமிழ் நாடு ஆரம்பப்  பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கல்வி பாது காப்பு விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அரசுப் பள்ளிகளை மூடக் கூடாது, மூடிய  அனைத்து பள்ளிகளையும் திறந்திட வேண்டும், தமிழ்வழிப் பள்ளிகளை அழிக்க  முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை களை நிறுத்த வேண்டும், தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் அரசாணைகள் 100, 101, 145, 164 ஆகியவற்றை திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இம்மாதம் 25 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகின்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக (செப். 25) புதன்கிழமையன்று காலை முதல் இரவு வரை விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கு.குண சேகரன் தலைமையில் சின்னசேலத்தில் துவங்கிய பிரச்சார இயக்கம் கள்ளக்குறிச்சி,  சங்கராபுரம், செஞ்சி, திண்டிவனம், விழுப்பு ரம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.  மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை, மாநிலச் செயலாளர் சா.சித்ரா ஆகியோர் பிரச்சார கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  எல்.ஐ.சி ஊழியர் சங்க நிர்வாகி வேலாயு தம் அரசு ஊழியர் சங்க கள்ளக்குறிச்சி வட்டச்செயலாளர் வீரபத்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாவட்டச் செய லாளர் இரா.சண்முகசாமி, பொருளாளர் சு. தண்டபாணி, பி.ஜாகிர்உசேன், ஆர்.ரவிக்குமார், கு.சுதா உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். கடலூரில் நடந்த பிரசார இயக்கத்திற்கு மாவட்டத் தலைவர் இரா.அறிவழகன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.அரி கிருஷ்ணன், தமிழ்நாடு உயர்நிலை மேல்  நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்  தெரசாகேத்தரின் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.