சின்னசேலம். டிச ,18- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்தில் அமைந்துள்ள குரால் கிரா மத்தில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குரால் கிளை சார்பில் கோரிக்கை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. குரால் கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் முறையான குடிநீர் வசதி ஏற் படுத்த வேண்டும், தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிய ருக்கு கழிப்பிட வசதி செய்து தரவேண்டும், சுகாதார வளா கங்களை சரி செய்தும், பல் வேறு தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் செல்ல கால் வாயை சரி செய்யக் கோரி யும், ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை பாது காக்கக் கோரியும், தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தொலைக்காட்சி அறை பழுதடைந்து உள்ள தால் அதனை புதிதாக கட்டித் தரக் கோரியும்,100 நாள் வேலையை ஊராட்சியில் உடனடியாக வழங்கிட கோரி யும், முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரியும், மாரி யம்மன் கோவில் மற்றும் மயா னப் பாதை வழியிலும் புதி தாக கம்பம் நட்டு மின் விளக்கு பொருத்த வேண் டும், சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றித் தர வேண்டும், அம்பேத்கர் நகருக்கு சிமெண்ட் சாலை அமைத்து தரக் கோரியும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு டிச.18 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் ஆர். முனியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.சுப்பிர மணியன், வட்டச் செயலா ளர் டி.மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினர் இ.அல மேலு, வட்டக்குழு உறுப்பி னர்கள் பி.பழனி, கே.மூக் கன், ஆர்.பாபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.