கள்ளக்குறிச்சி, ஜூன் 17- கிராமப் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்களான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்கள், கிராம துப்புரவு ஊழியர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கக்கோரி கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் முரு கேசன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் அ.வீராசாமி, மாவட்ட பொருளாளர் ஏ.மணி, ஏ.தங்க பாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்கூட்டியே காவல்துறையிடம் அனுமதி கோரியும் கடைசி நிமிடம் வரைக்கும் பதில் இல்லை. ஆனால், திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடை பெற்றுக்கொண்ட ருந்தபோது ஒலி பெருக்கி வைக்கக்கூடாது என்று முரட்டுத்தனமாக போராட்டத் தலைவர்களை தடுத்தனர். தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சியில் ஜன நாயக இயக்கங்களுக்கு காவல்துறையின் சட்டவிரோதமான கட்டுப்பாடு விதிக்கப்படு வது நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு சங்கத்தின் மாவட்ட சிறப்புத் தலை வர் ஆர். ஜீவா தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.முத்துக்குமரன், அரசு போக்கு வரத்து கழக சிஐடியு பொதுச்செயலாளர் ஆர்.மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் வி.பாலகிருஷ்ணன் மற்றும் பலர் பேசினர்.
கடலூர்
கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உள்ளாட்சி துறை ஊழியர் சம்மேளனம் சிஐ டியு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி. இராஜேந்திரன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் வி.திருமுருகன், அனந்தநாராயணன் உள் ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.