உளுந்தூர்பேட்டை, ஆக. 29- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றி யத்திற்குட்பட்ட புதுநன்னாவரம் கிராமத்தின் பிரதான சாலை அருகே விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணறுக்கு தடுப்புச் சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தன. இந்த கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பலமுறை புகார் அளித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் அரசு அதிகாரிகள் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெங்க டேசன் (53) என்ற விவசாயி அந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். எனவே உடனடியாக அந்த கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வாலிபர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.