tamilnadu

img

100 நாள் வேலை: வழங்கு விவசாய தொழிலாளர்கள்

சங்கராபுரம். டிச, 21- கள்ளக்குறிச்சி மாவட்டம் பழைய சிறுவங்கூர் ஊராட்சியில் மூன்று ஆண்டு களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கா ததை கண்டித்தும், வேலைக்கான அட்டை வைத்துள்ளவர்களுக்கு உடனடியாக வேலை வழங்கக் கோரியும் அகில இந்திய  விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வேலை அட்டை வைத்துள்ளவர்க ளுக்கும், புதிதாக மனு கொடுப்பவர்க ளுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும்,  சட்டக்கூலி ரூ 229தை குறைக்காமல் வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி பழைய சிறுவங்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் எஸ்.பாலமுருகன் தலைமை தாங்கினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழு மலை, செயற்குழு உறுப்பினர் எம்.கே. பூவராகன், வட்டச் செயலாளர் வை.பழனி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணியன், செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர் கோ.மணிமாறன், கிளைத் தலைவர் கே.ராஜா, எம்.சி.ஆறுமுகம் மற்  றும் கே.பாலமுருகன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர்.