tamilnadu

img

பாஜகவினரை எதையும் புரிந்து பேசச் சொல்லுங்கள்..

பெங்களூரு:
யோகா சாமியார் ராம்தேவ், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், மக்கள் தொகைப் பெருக்கம் பற்றி ரொம்பவே கவலைப்பட்டிருந்தார்.

“இந்தியாவின் மக்கள்தொகையை 150 கோடியைத் தாண்டவிடக் கூடாது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த 3-ஆவது குழந்தை பிறப்பை அரசு தடுக்க வேண்டும். அதாவது மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளின் வாக்குரிமையை பறிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்த 3-ஆவது குழந்தை தேர்தலில் போட்டியிடுவதோ அரசின் சலுகைகளை அனுபவிப்பதையோ எதையுமே அனுமதிக்க கூடாது” என்று கூறியிருந்தார்.இதற்கு மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி அளித்த பதிலில், “பிரதமர் மோடியே அவரது பெற்றோருக்கு மூன்றாவது குழந்தைதான்; ஆகவே, வாக்குரிமை பறிப்பை முதலில் மோடியிடமிருந்து தொடங்குவோமா?” என்று கேட்டிருந்தார்.

இந்நிலையில், அசாதுதீன் கருத்தையே நடிகர் பிரகாஷ் ராஜூம் பிரதிபலித்துள்ளார். “பிரதமர் அவர்களே.. புரியாமல் எதை எதையோ உளறும் பாபா ராம்தேவ் போன்றவர்களுக்கு மீண்டும் சொல்லி புரிய வையுங்கள்” என பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். மோடியின் வாக்குரிமையே பறிபோகும் என்று புரியாமல் ராம்தேவ் போன்றவர்கள் உளறுவதாக பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.