சண்டிகர்:
காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள, ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினர் பதவியை ரத்து செய்ய மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. அறக்கட்டளையை அரசியல் சார்பற்றதாக மாற்றும் நடவடிக்கை என்ற பெயரில் இதுதொடர்பான மசோதா ஒன்றையும் மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின், அறக்கட்டளை உறுப்பினர் பதவி பறிக்கப்படுவதற்கு, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.