tamilnadu

img

இந்தியில் எழுதப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் கிழிப்பு

பெங்களூரு:
பெங்களூருவில், இந்தியில் மட் டுமே எழுதி வைக்கப்பட்டிருந்த அலங்கார பதாகைகளைக் கிழித்து, கன்னட மொழி ஆர்வலர்கள் போராட் டம் நடத்தியுள்ளனர்.பெங்களூரின் கணேஷ் பாக் கோவிலின் வெளிப்புறம், ஜெயின் சமூகத்தினர் வைத்திருந்த அலங்கார வளைவுகளில் எழுத்துக்கள் இந்தி மொழியில் இருந்துள்ளன. இதைக் கண்ட கன்னட மொழி ஆர்வலர்கள், கன்னடத்தைப் புறக்கணித்து விட்டு, இந்தியில் மட்டும்பதாகைகள் வைப்பதை அனுமதிக்க முடியாது என்று முழக்கம் எழுப்பி, அதனை அகற்றக் கோரியுள்ளனர். ஆனால், அங்கிருந்த காவலாளிகள் அதற்கு மறுக்கவே, துணியில் எழுதப் பட்டிருந்த இந்தி வாசகங்களை கன் னட ஆர்வலர்கள் கிழித்து எறிந்தனர்.ஜெயின் சமூகத்தினர், இதுதொடர் பாக அளித்த புகாரின் பேரில், ரமேஷ்கவுடா, டாபி அஞ்சனப்பா, ஹரீஷ் குமார்,மஞ்சுநாத், சந்திரசேகர் மற்றும் மாதேஷ் கவுடா ஆகிய 6 பேர் மீது, பிரிவு 153ஏ, 427, 504 மற்றும் 506 ஆகியநான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீசார், மேலும் அவர்களைக்கைது செய்துள்ளனர். பேனர்களை கிழித்தவர்களை ‘ரவுடிகள்’ என்றும் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமர் சித்துள்ளார்.இதற்கு கன்னடர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர்கள் #ReleaseKannadaActivists எனும் ஹேஷ்டேக்கை, சமூக வலைத்தளங் களில் டிரெண்டாக்கி வருகின்றனர். இந்திக்கு எதிராகவும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

;