tamilnadu

img

இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறவில்லையாம்!

ஆறுதல் கூறி சமாளிக்கிறார் ஹர்ஷ்வர்தன்

புதுதில்லி, மே 5- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூக பரவலை அடைய வில்லை என மத்திய அரசு ஆறுதல் கூறுகிறது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், முதன் முதலாக சுமார் 4 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருவதால், மக்கள் மத்தி யில் அச்சம் நிலவுகிறது. கொரோனா பாதிப்பின் 3-வது நிலையான சமூக பரவல்  என்ற நிலையை கொரோனா பாதிப்பு எட்டி விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு நாள் தோறும் கொரோனாவால் பாதிக்கப்படு வர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவல் நிலையை இன்னும் எட்டவில்லை; இயல்பான நிலை யிலேயே உள்ளது; சமூகப் பரவலைத் தடுக்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “பொருளா தாரம்” போலவே ஆரோக்கியமும் “ரேடா ரில்” (கண்காணிப்பில்) இருக்க வேண்டும். அரசாங்கமும் மேம்படுத்தும் நடவடிக்கை களில் ஈடுபட வேண்டுமென்றார். செவ்வாயன்று சுகாதாரத்துறை அமைச்ச கம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,836 இலிருந்து 46,433 ஆக உயர்ந்துள்ளது. 3,597 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கூர்மையான உயர்வு. பலியும் 24 மணி நேரத்தில் 194 பதிவாகியுள்ளது. நாடு முழு வதும் 27.40 சதவீத நோயாளிகள் குண மடைந்துள்ளனர்.

தொடர்ந்து பேசிய ஹர்ஷ்வர்தன், கொரோ னா வைரஸை எதிர்த்துப் போராடுவது ராக்கெட் அறிவியல் அல்ல என்பதை  நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த கால கட்டத்தில் கை, கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், சுகாதா ரத்தை பாதுகாக்க வேண்டும் இதுவே நம்மை இயல்புநிலைக்குக் கொண்டு வருமென்றார்.  மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி பல மாநிலங்கள் ஊரடங்கை தளர்த்தியதால், திங்களன்று நாடு  முழுவதும் உள்ள மதுபானக் கடைகளுக்கு வெளியே நிலவிய குழப்பங்கள் குறித்தும் விளக்கினார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 46,711 ஆக உள்ளது.  கொரோ னா பாதிப்பில் இருந்து  11,161 பேர் மீண்டுள்ள நிலையில், 1583 பேர்உயிரிழந்துள்ளனர்.