tamilnadu

img

‘காபி டே’ நிறுவனர் சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு

பெங்களூரூ:
காபி டேயின் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் நேத்ராவதி ஆற்றின் அருகே புதன்கிழமை 7 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது.சித்தார்த்தா கடந்த திங்கள்கிழமை மாலை நேத்ராவதி ஆற்றில் குதித்ததாக சில தகவல்கள் தெரிவித்தன.ஒன்றரை நாட்களாக தேடுதல் பணி நடந்து வந்த நிலையில் அவரது  உடல் புதனன்று கிடைத்தது.இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 1750 கிளைகளு டன் நாட்டின் முன்னணி காபி பப்பாக இருந்துவரும் கபே காபி டே நிறுவனத்துக்கு மலேசியா, நேபாளம் மற்றும் எகிப்து ஆகிய நாடு களிலும் கிளைகள் உள்ளன.ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் போட்டியால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி கடுமை யாக வீழ்ச்சியடைந்துள்ள தாக சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அண்மை யில் இந்தியாவில் உள்ள பலசிறிய பப்களை இந்நிறு வனம் மூடியது.கோகோ கோலாவுடன் தனது நிறுவனம் தொடர்பாக சித்தார்த்தா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த மாதத்தில் சில ஊடகங்கள் கருத்து வெளியிட்டன. ஆனால், அதனை யாரும் உறுதி செய்யவில்லை.முன்னாள் கர்நாடக மாநில முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.