கரூர், நவ.1- அனைத்து அரசு மருத்துவர்க ளுக்கும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு மருத்துவர்கள் சங் கங்களின் கூட்டமைப்பின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் 7 வது நாளாக கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளகள் மருத்துவர்கள் சிவராமன், விஜய குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மருத்துவர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு அடக்குமுறைகளை கைவிட வலி யுறுத்திம் சிஐடியு சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், எல்ஐசி ஊழியர் சங்கம், மருந்தாளுநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை வாரி சங்கங்களின் சார்பில் மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கரூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆதரவு போராட்டம் தமிழ்நாடு மருந்தாளுநர் சங்க மாநில தலைவர் எம்.சுப்பிரமணியன் தலை மையில் நடைபெற்றது. சிஐடியு சங்க மாவட்ட தலை வர் ஜி.ஜீவானந்தம், மாவட்ட செய லாளர் சி.முருகேசன், எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணைத் தலைவர் வி.கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.சக்திவேல், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் பொன்ஜெயராம், கால்நடை ஆய் வாளர் சங்க மாநில பொதுச்செய லாளர் தாமோதரன், தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்புனர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வராணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பல்வேறு துறை வாரி சங்கங்களின் மாவட்ட நிர்வாகி கள் பாலசுப்ரமணியன், இளங்கோ, சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.